காதலனுடன் மாயமான கல்லூரி மாணவி… ஆத்திரத்தில் இளைஞரின் தந்தை படுகொலை…

 

காதலனுடன் மாயமான கல்லூரி மாணவி… ஆத்திரத்தில் இளைஞரின் தந்தை படுகொலை…

சேலம்

சேலம் அருகே காதல் விவகாரத்தில் இளைஞரின் தந்தை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கொங்காணபுரம் அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி செங்கான்வளவை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (53). இவரது மகன் பிரகாஷ் (25). இவர், காச்சாக்காரன் வளவை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த இருவரும் கடந்த மாதம் வீட்டில் வெளியேறினர்.

காதலனுடன் மாயமான கல்லூரி மாணவி… ஆத்திரத்தில் இளைஞரின் தந்தை படுகொலை…

இதுகுறித்து சத்யாவின் தந்தை செல்வம் அளித்த புகாரின் பேரில், கொங்கணாபுரம் போலீசார் பிரகாஷுடன் சென்ற சத்யாவை மீட்டு, அவரது குடும்பத்தனிரடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று சத்யா மீண்டும் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம், நேற்று மாலை பிரகாஷின் வீட்டிற்கு சென்று மகளை தன்னுடன் அனுப்பும்படி கேட்டு, தங்கவேலிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த செல்வம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கவேலுவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந் தங்கவேலுவை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலனுடன் மாயமான கல்லூரி மாணவி… ஆத்திரத்தில் இளைஞரின் தந்தை படுகொலை…

தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி செல்வம் சரணடைந்த நிலையில், அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.