உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் பூவிருந்தவல்லி சாலையில் விபத்தில் சிக்கிய இளைஞரை தனது காரில் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய சென்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தனது பணியை முடித்துக்கொண்டு, காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவரது கார் வந்து கொண்டிருந்தபோது பூவிருந்தவல்லி அருகே இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.

உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதைக் கண்ட அமைச்சர் தனது காரை நிறுத்தி உடனடியாக அந்த இளைஞரை தனது காரில் ஏற்றிக்கொண்டு பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அந்த இளைஞருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அங்கேயே இருந்து கேட்டு தெரிந்து கொண்ட அமைச்சர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். விபத்தில் சிக்கியவரை காப்பாற்றியதுடன் அல்லாமல் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அருகிலேயே இருந்து பார்த்துவிட்டு அங்கிருந்து சென்ற அமைச்சர் சுப்பிரமணியனை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்