கழட்டிவிட்ட காதலி -காண்டான காதலன் -மாடி வழியாக வந்து செஞ்ச வேலை.

 

கழட்டிவிட்ட காதலி -காண்டான காதலன் -மாடி வழியாக வந்து செஞ்ச வேலை.


தனது காதலியை வேறொருவருக்கு நிச்சசயம் செய்ததால் காண்டான அவரின் காதலன் அவரையும் அவரின் தாயாரையும் கத்தியால் குத்தினார் .

கழட்டிவிட்ட காதலி -காண்டான காதலன் -மாடி வழியாக வந்து செஞ்ச வேலை.


உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜரார் பகுதியில் வசிக்கும் காமினி என்ற 18 வயதான பெண், அதே தெருவில் வசிக்கும் கோவிந்த் என்பவரை காதலித்து வந்தார்.கடந்த ஒரு வருடமாக அவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள் .இந்நிலையில் அந்த பெண் காமினிக்கு அவரின் தாயார் வேறொரு மாப்பிள்ளையை கல்யாணம் செய்து வைக்க நிச்சயம் செய்தார் .
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட காமினியின் காதலன் கோவிந்த் கோபமுற்றார் .அதனால் அவரின் காதலியை சந்தித்து பேச பலமுறை முயன்றார் .ஆனால் அவரின் காதலியும் அவரின் தாயார் பேச்சை கேட்டு அவரின் காதலனை கழட்டி விட்டுவிட்டு வேறொரு மாப்பிளையை கல்யாம் செய்து கொள்ள சம்மதித்து விட்டார் .இதனால் தன்னுடைய காதலியை சந்திக்க முடியாத கோவிந்த் மிகவும் மன வேதனையடைந்தார் .
அதனால் கடந்த வாரம் ஒருநாள் நள்ளிரவு நேரத்தில் ஒரு கத்தியை எடுத்து கொண்டு, அந்த காதலியின் வீட்டு மொட்டை மாடி வழியாக ஏறி ,அவரின் வீட்டிற்குள் நுழைந்தார் .அப்போது அவரின் காதலி காமினியும் ,அவரின் தாயாரும் நன்றாக உறங்கி கொண்டிருந்தார்கள் .அப்போது அங்கு வந்த அந்த காதலன் இருவரையும் கத்தியால் மாறி மாறி சரமாரியாக குத்தினார் .இதனால் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். அப்போது அவர்களை காப்பாற்ற அவர்களின் உறவுப்பெண் ஒருவர் அந்த வீட்ற்குள்ளிருந்து ஓடி வந்தார் .அப்போது அந்த கோவிந்த் அவரையும் அந்த கத்தியால் சரமாரியாக குத்தி காயப்படுத்தனார் .பின்னர் அனைவரும் அருகிலுள்ள ஹாஸ்பிடலுக்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்கள் .பின்னர் போலிசார் வழக்கு பதிவு செய்து , அந்த காதலன் கோவிந்தை தேடி வருகிறார்கள் .இந்த வழக்கை விசாரிப்பதற்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்வதற்கும் ஐந்து போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.

கழட்டிவிட்ட காதலி -காண்டான காதலன் -மாடி வழியாக வந்து செஞ்ச வேலை.
shadow man with knife on red background