நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை

 

நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை

சிவகங்கை

மானாமதுரையில் நீதிமன்றம் அருகே இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிகொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவங்ககை மாவட்டம் மானாமதுரை அடுத்த வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் கண்ணன்(29). இவரது நண்பர் சிவகங்கையை சேர்ந்த அருள்நாதன்(28). நேற்று இவர்கள் இருவரும் மானாமதுரை உரிமையியல் நீதிமன்றம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இருவரையும் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில், படுகாயமடைந்து சாலையில் கிடந்த இருவரையும் அந்த பகுதி மக்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அப்போது வழியிலேயே அருள்நாதன் உயிரிழந்தார்.

நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை

தொடர்ந்து, சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வினோத்கண்ணன், பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலையான அருள்நாதன் மற்றும் வினோத்கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.