காட்டுப் பகுதியில் கிடந்த இளைஞரின் சடலம்: அதிர வைக்கும் பின்னணி!

 

காட்டுப் பகுதியில் கிடந்த இளைஞரின் சடலம்: அதிர வைக்கும் பின்னணி!

நெல்லையை அடுத்த மானூர் நரியூத்து கிராமத்தில் இருக்கும் காட்டுப் பகுதியில் 30 வயதான வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை சோதனை செய்ததில் ரத்தக்கறைகள் இருந்ததையும் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.

காட்டுப் பகுதியில் கிடந்த இளைஞரின் சடலம்: அதிர வைக்கும் பின்னணி!

இதையடுத்து நண்பர்களுடன் ஏற்பட்ட தகறாரில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணையை தொடர்ந்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. உயிரிழந்தவர் புதுக்குளம் பகுதியை சேர்ந்த அஜித் (30) என்பதும் அவர் இறைச்சி கடை நடத்தி வந்தார் என்பதும் வீட்டை விட்டு தனியே வசித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு, தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க தலைவரை கொலை செய்ய முயன்ற கும்பலுடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது.

காட்டுப் பகுதியில் கிடந்த இளைஞரின் சடலம்: அதிர வைக்கும் பின்னணி!

இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விசாரணையை தொடர்ந்தனர். அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் அஜித்தை சரமாரியாக தாக்கி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இளைஞர் அஜித்தை கொலை செய்த கும்பலுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.