திருவண்ணாமலை அருகே இளைஞர் அடித்துக் கொலை – போலீசார் விசாரணை!

 

திருவண்ணாமலை அருகே இளைஞர் அடித்துக் கொலை – போலீசார் விசாரணை!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள மேலராணி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அந்த பகுதியில் மினிவேன் ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதில் வீட்டில் இருந்து சென்ற பிரகாஷ், பின்னர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் பிரகாஷ்-ஐ தேடி வந்த நிலையில், மேல்தாங்கல் மலை பகுதியில் அவர் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., அரவிந்த் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, கலசப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

திருவண்ணாமலை அருகே இளைஞர் அடித்துக் கொலை – போலீசார் விசாரணை!

இந்த நிலையில், பிரகாஷை கொலை செய்தவர்களை கைதுசெய்யக் கோரி, இன்று காலை அவரது உறவினர்கள் மேலராணி பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே, பிரகாஷ் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.