ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை – அண்ணன் கைது!

 

ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை – அண்ணன் கைது!

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். மரவள்ளி கிழங்கு வியாபாரி. இவருக்கும், இவரது தம்பி செல்வத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று பாண்டியனின் மகன்கள் பிரகாஷ், பிரசாத் ஆகியோர் சாலையில் சென்றபோது, சித்தப்பா செல்வமும், அவரது உறவினர்களும் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனை அறிந்த, பாண்டியன் தனது மகன்களை அழைத்துச் சென்று, தம்பி செல்வத்திடம் தகராறு குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், செல்வத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை – அண்ணன் கைது!

இதனை தொடர்ந்து, இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் பாண்டியன் மற்றும் செல்வத்தின் மகன் தனேஷ் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சை மற்றும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து, செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து செல்வத்தின் மனைவி அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி பாண்டியனை கைது செய்தனர்.