முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை… தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் தப்பியோட்டம்!

 

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை… தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் தப்பியோட்டம்!

மதுரை

மதுரை திருப்பரங்குன்றத்தில் தொழில்போட்டி காரணமாக இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தந்தை, மகன்கள் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஜே.ஜே நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது வீட்டில் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சரவணன் என்பவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, திருப்பரங்குன்றம் கைத்தறி நகரை சேர்ந்த டைல்ஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் (22) என்பவர், வெங்கடேசனுக்கு ஆதரவாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை… தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் தப்பியோட்டம்!

இதனால் ஆத்திரமடைந்த சரவணன், அவரது தந்தை நாகராஜ்ன், தம்பி கார்த்திக் உள்ளிட்டோர் நேற்றிரவு அருண்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இதனை தடுக்க முயன்ற பெண் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சரவணன், அவரது தந்தை நாகராஜன் உள்ளிட்ட 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். தொழிற்போட்டியால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.