திருச்சி அருகே சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை!

 

திருச்சி அருகே சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை!

திருச்சி

திருச்சி அருகே சுமை தூக்கும் தொழிலாளி மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி அடுத்த மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் மணிவாசகம் (21). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு மணிவசாகம் கீழகல்காண்டார்கோட்டை ஆலத்தூர் பாலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

திருச்சி அருகே சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை!

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மணிவாசகத்தை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பொன்மலை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து மணிவாசகத்தின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.