மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக்கொலை – சித்தப்பா கைது!

 

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக்கொலை – சித்தப்பா கைது!

நாமக்கல்

ராசிபுரம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரங்கப்பன் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (45). வாடகை கார் ஓட்டுநர். இவரது அண்ணன் மகன் ஜெயராமன் (24). கட்டிட தொழிலாளி. மூர்த்திக்கும், அவரது அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக்கொலை – சித்தப்பா கைது!

இந்த நிலையில், நேற்று மூர்த்தியும், ஜெயராமனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, சொத்து பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த மூர்த்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயராமனை சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோரனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலையாளி மூர்த்தியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்..