பிரச்சாரத்துக்கு சென்ற இளைஞர் டிராக்டரை ஏற்றி கொலை… காத்திருந்து பழிதீர்த்த உறவினர்கள்…

 

பிரச்சாரத்துக்கு சென்ற இளைஞர் டிராக்டரை ஏற்றி கொலை… காத்திருந்து பழிதீர்த்த உறவினர்கள்…

கிருஷ்ணகிரி

தளி அருகே தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற கர்நாடக இளைஞரை, டிராக்டர் ஏற்றி படுகொலை செய்த உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் அடுத்த ஆதிகொண்டஹள்ளியை சேர்ந்தவர் சென்ன கிருஷ்ணன். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள உளிபண்டாவை சேர்ந்த உறவினர் ஓபேகவுடு என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஓபேகவுடுவை, சென்ன கிருஷ்ணன் படுகொலை செய்தார்.

பிரச்சாரத்துக்கு சென்ற இளைஞர் டிராக்டரை ஏற்றி கொலை… காத்திருந்து பழிதீர்த்த உறவினர்கள்…

இதனால், ஓபேகவுடுவின் உறவினர்கள் கொலைக்கு பழிவாங்க சமயம் பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில், சென்ன கிருஷ்ணன் நேற்றிரவு சட்டமன்ற தேர்தலில் வாக்காளருக்கு வாக்கு சேகரிப்பதற்காக, உளிபெண்டா பகுதிக்கு வந்திருந்தார். இதனை அறிந்த, ஓபே கவுடுவின் தம்பி பாப்பையா மற்றும் மகன் முருகேஷ் ஆகியோர், சாலையில் நடந்துசென்ற சென்ன கிருஷ்ணன் மீது அதிவேகமாக டிராக்டரில் மோதினர்.

இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சென்ன கிருஷ்ணனின் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்துவிட்டு, தப்பியோடினர். தகவல் அறிந்த தளி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகேஷ் மற்றும் பாப்பையாவை தேடி வருகின்றனர்.