கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை… வடமாநில தம்பதி கைது…

 

கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை… வடமாநில தம்பதி கைது…

திருவள்ளூர்

மீஞ்சூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞரை படுகொலை செய்த வடமாநில தம்பதியை போலீசார் கைதுசெய்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் தேவேந்திர சிங்(41) – சாயா (33) தம்பதியினர். இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டூர் பகுதியில் தங்கியிருந்து, டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சாயாவுக்கு, பக்கத்து வீட்டில் வசித்து வந்த உத்தரபிரதேச மாநில தொழிலாளி மனோஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக் காதலாக மாறிய நிலையில், இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சாயாவை கணவரை பிரிந்து தன்னுடன் வருமாறு மனோஜ் வற்புறுத்தி உள்ளார். அதற்கு சாயா மறுப்பு தெரிவித்ததால், தனிமையில் இருந்தபோது எடுத்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாயா நடந்தவற்றை தனது கணவரிடம் தெரிவித்தார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை… வடமாநில தம்பதி கைது…

இதனை அடுத்து, அவரை கொலை செய்ய திட்டமிட்ட தம்பதியினர், வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனோஜை உருட்டுக் கட்டையால் தாக்கி படுகொலை செய்தனர். நள்ளிரவில் உடலை மூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றபோது, காட்டூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருவரையும் மறித்து விசாரணை மேற்கொண்டனர்..

அப்போது, மூட்டையில் சடலத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், தேவேந்திர சிங் – சாயா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிந்து கைதுசெய்த போலீசார், இருவருடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.