வீடியோ காலில் வந்த வாலிபர் – சிக்கிய பெண் -அடுத்து வாட்ஸ் அப்பால் நடந்த விபரீதம் .

 

வீடியோ காலில் வந்த வாலிபர் – சிக்கிய பெண் -அடுத்து வாட்ஸ் அப்பால் நடந்த விபரீதம் .


ஒரு பெண்ணோடு சமூக ஊடகத்தில் பழகி பல வீடியோக்கள் எடுத்து மிரட்டிய வாலிபரை போலிசார் கைது செய்தனர்

வீடியோ காலில் வந்த வாலிபர் – சிக்கிய பெண் -அடுத்து வாட்ஸ் அப்பால் நடந்த விபரீதம் .


மத்திய பிரதேசத்தின் போபாலில் வசிக்கும் 19 வயது டீனேஜ் பெண்ணுக்கு இணைய தளத்தில் பலரிடம் அரட்டையடிக்கும் பழக்கம் உண்டு .இந்நிலையில் அவரின் வீட்டுக்கு அருகே வசிக்கும் ஒரு 25 வயதான வாலிபர் ஒருவர் அவரிடம் சமூக ஊடகம் மூலம் நட்பு கொண்டார் .அதன் பிறகு இருவரும் நண்பர்களாக அரட்டையடித்து வந்தனர் .அதன் பிறகு அந்த வாலிபர் அடிக்கடி அந்த பெண்ணிடம் இரவு நேரத்தில் வீடியோ கால் மூலம் வந்து அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார் .
அந்த பெண்ணும் அவரோடு பேசியுள்ளார் .இந்நிலையில் அந்த வாலிபர் அந்த ஆபாச உரையாடல்களை பதிவு செய்து வைத்துக்கொண்டார் .பின்னர் திடீரென ஒரு நாள் அந்த பெண்ணுக்கு போன் செய்து அவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார் .அதன் பிறகு அந்த பெண்ணை நேரில் சந்தித்து தன்னை திருமணம் செய்துகொள்ளவில்லையென்றால் , சமூக ஊடகத்தில் நம்முடைய ஆபாச உரையாடல் வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டினார் .அதனால் அந்த பெண் அவரை கண்டு பயந்தார் .பின்னர் தைரியத்தை வரவைத்துக்கொண்டு புதன்கிழமை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் அந்த வாலிபரை விசாரித்து, அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்கை பதிவு செய்து கைது செய்தனர்.