சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில், இளைஞர் உயிரிழப்பு!

 

சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில், இளைஞர் உயிரிழப்பு!

மதுரை

மதுரை அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானத்தில் மரச்சாமான்கள் தயாரிப்பு தொழில் செய்துவந்த நபர் உயிரிழந்தார்

மதுரை மாவட்டம் அவனியாபுத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (35). இவர் அதே பகுதியில் மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு திருவண்ணாமலைக்கு பர்னிச்சர்களை டெலிவரி செய்வதற்காக சென்ற கோபாலகிருஷ்ணன் பின்னர் வேனில் மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில், இளைஞர் உயிரிழப்பு!

வேனை அவனியாபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த நிலையில் மதுரை மாவட்டம் கொட்டாம்பாட்டி அடுத்த அய்யாப்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த கோபால கிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பாண்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து, கொட்டாம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.