இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி, இருவர் படுகாயம்!

 

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி, இருவர் படுகாயம்!

கோவை

கோவை அருகே சாலையோர விளம்பர பலகை மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (21). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று ரமேஷ், உடன் பணிபுரியும் புவனேஷ்வரன் மற்றும் செல்வகுமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கோவில்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி, இருவர் படுகாயம்!

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த விளம்பர பலகையின் மீது அதிவேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த புவனேஷ்வரன் மற்றும் செல்குமார் ஆகியோரை அந்த பகுதி மக்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவல் அறிந்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.