சின்னமனூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி!

 

சின்னமனூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி!

தேனி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள கோகிலாபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் தினேஷ் (19). கூலி தொழிலாளி. இவர் நேற்று வேலை தொடர்பாக சின்னமனூருக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

சின்னமனூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி!

சின்னமனூர் அடுத்த கண்ணம்மாள் கார்டன் புறவழிச்சாலை அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் கொட்டியிருந்த மணல் மீது வாகனம் ஏறியது. இதில், வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்த தினேஷ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். மேலும், இதுகுறித்து, முனியாண்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.