நிலத்தை உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி!

 

நிலத்தை உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி!

நாகை

வேதாரண்யம் அருகே உழவுப் பணியின்போது டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (28). டிராக்டர் ஓட்டுநர். இவர் தனது நிலத்தை உழுவதற்காக, அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வாடகைக்கு டிராக்டரைஎடுத்து உள்ளார். தொடர்ந்து, நேற்று தனது நிலத்தில் டிராக்டரை கொண்டு உழவுப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

நிலத்தை உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக நிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கிக்கொண்ட கலியமூர்த்தி உயிருக்கு போராடினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு கலியமூர்த்திக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கரியாபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.