எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் இளைஞர் பலி!

 

எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் இளைஞர் பலி!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில், பொங்கல் பண்டிகையையொட்டி திங்கள் கிழமை எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் ஆந்திராவில் இருந்த வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் இளைஞர் பலி!

போட்டியின் போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டியை சேர்ந்த சக்தி(26) என்பவர், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்றிவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.