கும்பகோணம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை- சகோதரர் உள்பட மூவர் படுகாயம்

 

கும்பகோணம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை- சகோதரர் உள்பட மூவர் படுகாயம்

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிகொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணம் அருகே சோழபுரம் துளுக்கவெளி கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கு அருண்குமார் (29) மற்றும் அரவிந்த் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சகோதரர்கள் இருவரும் அந்த பகுதியில் பால் பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளனர். சமீபத்தில் மாட்டுக் கொட்டகையில் இருந்த இரும்பு கதவு திருடப்பட்டது தொடர்பாக, இராமானுஜபுரத்தை சேர்ந்த நபரை, அருண் மற்றும் அரவிந்த ஆகியோர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கும்பகோணம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை- சகோதரர் உள்பட மூவர் படுகாயம்

இந்த நிலையில் இன்று மாலை அருண்குமாரின் பண்ணைக்கு காரில் வந்த 6 பேர் கும்பல், சகோதரர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், அதனை தடுக்க முயன்ற அதே கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (25) மற்றும் மோகன் (30) ஆகியோரையும், அந்த கும்பல் வெட்டியது. இதில், அருண்குமார் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். படுகாயம் அடைந்த அரவிந்த் மற்றும் சந்தோஷ் ஆகியோரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மோகன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த கும்பகோணம் போலீசார், அருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.