லாரி மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி – 4 பேர் படுகாயம்!

 

லாரி மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி – 4 பேர் படுகாயம்!

திருப்பூர்

வெள்ளகோவில் அருகே முன்னால் சென்ற லாரியின் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தார்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன்கள் கார்த்திகேயன் (36) மற்றும் கோபால்சாமி(32). இவர்கள் நேற்று திருச்சி மாவட்டம் வீரப்பூரில் நடந்த பெரியகாண்டி அம்மன் கோயில் தேர் திருவிழாவுக்காக, நண்பர்களுடன் சென்றிருந்தனர். பின்னர், திருவிழா முடிந்து நேற்று மாலை அனைவரும் காரில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சுரேஷ் என்பவர் ஓட்டிச்சென்றார்.

லாரி மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி – 4 பேர் படுகாயம்!

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அடுத்த குருக்கத்தி அருகே சென்றபோது, கார் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இதில் காரில் முன்னால் அமர்ந்திருந்த கோபால்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சுரேஷ், கார்த்திகேயன் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.