திருவாடானையில் நடுரோட்டில் இளைஞர் வெட்டி படுகொலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் திருவாடானை அருகே எஸ். வி. மங்கலத்தைச் சேர்ந்த மெக்கானிக் விக்னேஷ் என்பவர் தன் நண்பருடன் காரைக்குடி வ. உ. சி ரோட்டில் உதிரி பாகங்கள் வாங்கிக்கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மீனாட்சிபுரம் மூவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வேறு ஒரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மூன்று நபர்கள் விக்னேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். விக்னேஷ் உடன் பயணம் செய்த நண்பரரையும் கொலை செய்யும் நோக்கில் விரட்டி இருக்கிறார்கள். அவர் தப்பி ஓடி உயிர் பிழைத்து விட்டார். வெட்டிய 3 நபர்களும் தங்களுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்பி ரோஹித் நாதன் மற்றும் டிஎஸ்பி அருண் பார்வையிட்டனர்.
திருவாடானையில் நடுரோட்டில் இளைஞர் வெட்டி படுகொலை!#Crime #tiruvadanai #TTN pic.twitter.com/cwe41WDujN
— Top Tamil News (@toptamilnews) September 15, 2020