கொடிக்கம்பம் அகற்றியபோது மின்சாரம் தாக்கி, இளைஞர் பலி!

 

கொடிக்கம்பம் அகற்றியபோது மின்சாரம் தாக்கி, இளைஞர் பலி!

திருச்சி

மணப்பாறை அருகே கொடிக்கம்பத்தை அகற்றியபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முஸ்தபா. இவரது மகன் ரஷித் அலி. சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, அந்த பகுதியில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் இன்று அரசியல் கட்சியினர் ஈடிபட்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக ரஷித் அலியும், பணியில் ஈடுபட்டிருந்தார்.

கொடிக்கம்பம் அகற்றியபோது மின்சாரம் தாக்கி, இளைஞர் பலி!

அப்போது, குழிக்குள் இருந்த இரும்பு கம்பத்தை வெளியே எடுத்தபோது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியின் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் ரஷித் அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.