விளாத்திக்குளம் கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி!

 

விளாத்திக்குளம் கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி!

தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் கண்மாயில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் கீழரத வீதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் அழகுராஜ். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றார். கண்மாயில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிய அழகுராஜ், நீரில் மூழ்கி மாயமாகினார்.

விளாத்திக்குளம் கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி!

இதனை கண்டு, அருகில் இருந்தவர்கள் விளாத்திக்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் கண்மாயில் இறங்கி தேடியபோது, அழகுராஜ் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் சடலத்தை மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.