வாணியம்பாடியில் பாலாற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

 

வாணியம்பாடியில் பாலாற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே பாலாற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நடுபட்டரை பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக பாலாற்றுக்கு சென்றுள்ளார். அப்போது பாலாற்றில் உள்ள பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் இறங்க முயற்சித்தபோது, கால்தவறி விழுந்ததில் ராஜன் நீரில் மூழ்கினார்.

வாணியம்பாடியில் பாலாற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

இதனை கண்டு அந்த பகுதி இளைஞர்கள் நீரில் இறங்கி தேடியும் ராஜன் கிடைக்காத நிலையில், வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 9 அடி ஆழமுடைய பள்ளத்தில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், 2 மணிநேர தேடலுக்கு பின் ராஜன் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, அவரது உடலை பிரதே பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, கிராமிய காவல்துறையினர் இந்த சமபவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.