டிராக்டர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் மரணம்: அதிர்ச்சி சம்பவம்!

 

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் மரணம்: அதிர்ச்சி சம்பவம்!

காரைக்கால் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநள்ளாறு பேட்டை மணல்மேட்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகன் தினேஷ் (26). இவரது நண்பர் மதுபாலன் (26). தினேஷ் பைக்கை ஓட்ட, இருவரும் நேற்று இரவு பைக்கில் திருநள்ளாறை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். விழிதியூர் சாலை அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே டிராக்டர் ஒன்று வந்துள்ளது. எதிர்பாராத விதமாக அங்கிருந்த மண் சறுக்கியதில், தினேஷ் டிராக்டருக்கு அடியில் சிக்கிக் கொண்டுள்ளார். மதுபாலன் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் மரணம்: அதிர்ச்சி சம்பவம்!

டிராக்டரின் டயருக்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்த தினேஷை மீட்ட பொதுமக்கள், திருநள்ளாறு சமுதாய நலவழிமையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு போதிய வசதி இல்லாததால் முதலுதவி அளிக்கப்பட்டு, தினேஷ் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தினேஷின் நண்பர் மதுபாலன் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், டிராக்டர் டிரைவர் ராஜமூர்த்தி (31) என்பது தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.