மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!

 

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!

திருவண்ணாமலை

ஆரணி அருகே இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சிறுமூர் பகுதியை சேர்ந்த குமரவேல் மகன் பாலாஜி (22). கூலி தொழிலாளி. இவர் நேற்று ஆரணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அவருடன் உறவினரான வினோத்(19) என்பவரும் உடன்சென்றார்.

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!

ஆரணி அடுத்த அரியப்பாடி பகுதியில் சென்றபோது, இருவரும் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். வினோத்திற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.