திருவையாறு அருகே மது அருந்திய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

 

திருவையாறு அருகே மது அருந்திய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தஞ்சை

திருவையாறு அருகே மதுஅருந்திவிட்டு கொள்ளிடம் ஆற்றை கடக்க முன்ற இளைஞர் நடுவழியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சை கீழவாசல் காவடிக்கார தெருவை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் சதிஷ்(32). ஜவுளிக்கடை ஊழியர். இவர் கொரோனா பரவல் காரணமாக தஞ்சையில் மதுக்கடைகள் திறக்காததால், அருகில் உள்ள அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் மது அருந்த முடிவு செய்தார். இதனையடுத்து, நேற்று மதியம் சதிஷ், அதே பகுதியை சேர்ந்த விமல்ராஜ், பிரகாஷ் ஆகியோருடன் திருவையாறு அடுத்த விளாங்குடிக்கு சென்று, அங்குள்ள கொள்ளிடம் ஆற்றின் மறுகரையில் உள்ள திருமானூர் ஒன்றியம் மஞ்சமேடு டாஸ்மாக்கில் சென்று மது அருந்தினர்.

திருவையாறு அருகே மது அருந்திய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

பின்னர், ஊருக்கு செல்வதற்காக 3 பேரும் கொள்ளிடம் ஆற்றில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சதிஷ் நடக்க முடியாமல், ஆற்றில் இருந்த நாணல் செடிகளில் அமர்ந்து விட்டார். இதனால் விமல்ராஜும், பிரகாஷும் கரைக்கு சென்று சாப்பாடு வாங்கிக் கொண்டு திரும்பி வந்தனர். அப்போது, சதிஷ் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சதிஷை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, புகாரின் பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.