இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!

 

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகேயுள்ள சென்னசமுத்திரம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மகன் அஜித்குமார் (24). இவர் கடந்த 26ஆம் தேதி அன்று தாளவாடி பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு உர மூட்டைகளை எடுத்துச்சென்றுவிட்டு, பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

சென்ன சமுத்திரம் அடுத்த மோரணம் பகுதியில் வந்தபோது, அஜித்குமார் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!

பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அஜித்குமார் உயிரிழந்தார். இது குறித்து மோரணம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.