சாலையில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை

 

சாலையில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை

தேனி

சின்னமனூரில் சாலையில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகன் அரவிந்தன்(24). கூலி தொழிலாளியான இவர், அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

சாலையில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை

இதனை கண்ட அந்த பகுதி மக்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அரவிந்தன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்தனின் பெற்றோர், இதுகுறித்து சினனமனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இளைஞர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.