ஓடும் பேருந்தில் மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் : தஞ்சையில் பயங்கரம்!

 

ஓடும் பேருந்தில் மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் : தஞ்சையில் பயங்கரம்!

ஓடும் பேருந்தில் மாணவியின் கழுத்தை இளைஞர் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் பேருந்தில் மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் : தஞ்சையில் பயங்கரம்!

தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு காரணம் கடுமையான தண்டனை வழங்கப்படாததே என்பது பலரின் பொதுவான கருத்தாக உள்ளது.

ஓடும் பேருந்தில் மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் : தஞ்சையில் பயங்கரம்!

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவையாறில் அஜித் என்ற கல்லூரி மாணவி ஒருவரை தீவிரமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இளைஞர் அஜித்தின் காதலை மாணவி ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

ஓடும் பேருந்தில் மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் : தஞ்சையில் பயங்கரம்!

தன்னை மாணவி காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் அஜித், திருவையாறு அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அறுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பியோட நினைத்த அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அத்துடன் காயம் அடைந்த மாணவி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.