பாதை தகராறில் இளைஞர் துக்கிட்டு தற்கொலை… டிஎஸ்பி நேரில் விசாரணை…

 

பாதை தகராறில் இளைஞர் துக்கிட்டு தற்கொலை… டிஎஸ்பி நேரில் விசாரணை…

தஞ்சை

ஒரத்தநாடு அருகே பாதை தகராறில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வினோத் குமார் (32). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் குணசேகரன் என்பவருக்கும் இடையே வீட்டு பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று இந்த விவகாரம் தொடர்பாக வினோத்குமார் மற்றும் குணசேகரன் தரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது.

பாதை தகராறில் இளைஞர் துக்கிட்டு தற்கொலை… டிஎஸ்பி நேரில் விசாரணை…

இதுகுறித்து, குணசேகரன் தரப்பினர் அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு வீட்டிற்கு திரும்பிய வினோத்குமார் இன்று அதிகாலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து, ஒரத்தநாடு டிஎஸ்பி பழனி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வினோத் குமார் தந்தை கோவிந்தராஜன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.