ஒட்டன்சத்திரம் தனியார் விடுதியில் துணிக்கடை ஊழியர் தற்கொலை!

 

ஒட்டன்சத்திரம் தனியார் விடுதியில் துணிக்கடை ஊழியர் தற்கொலை!

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே தனியார் விடுதியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் அடுத்த சீமக்குடியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள துணிக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதற்காக, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

ஒட்டன்சத்திரம் தனியார் விடுதியில் துணிக்கடை ஊழியர் தற்கொலை!

கடந்த சில நாட்களாக ரஞ்சித்குமார் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துற்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்களை கதவை உடைத்துச் சென்று பார்த்த போது, ரஞ்சித்குமார் தூக்கில் உடல் அழுகிய நிலையில் சடலமாக தொங்கினார்.

தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.