திருமணம் ஆகாத விரக்தியில் 90’ஸ் கிட் தற்கொலை

 

திருமணம் ஆகாத விரக்தியில் 90’ஸ் கிட் தற்கொலை

ராஜபாளையத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் ஒருவர், ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருமணம் ஆகாத விரக்தியில் 90’ஸ் கிட் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று 24ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கோவிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர் 31 வயதான முத்துகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. அவர் திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்திலிருந்து நேற்று 24ஆம் தேதி மாலை 3.35 மணி அளவில் கொல்லம் மெயில் சென்னை நோக்கி புறப்பட்டது, புறப்பட்ட ஐந்தாவது நிமிடத்தில் மலையடிப்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியில் திடீரென்று ஒரு இளைஞர் ஓடி வந்து ரயில் முன் பாய்ந்தார். அவர் யாரென்று தெரியாமல் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்த முத்துக்காளை என்பவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 31) என்பது தெரியவந்துள்ளது.

இவருக்கு 31 வயது ஆகியும் திருமணமாகாமல் நூற்பாலையில் பணிபுரிந்து வந்து கொண்டிருந்தார். அப்பா, அம்மா பிரிந்து வாழ்ந்த நிலையில் அம்மாவுடன் முத்துகிருஷ்ணன், அவரது அண்ணன் சந்திரசேகர் (வயது 34) என்பவரும் வசித்து வந்தனர். அண்ணனுக்கும் திருமணம் ஆகாமல் தனக்கும் திருமணம் ஆகாத நிலையில் வீட்டில் நகை ஒன்று காணாமல் போய்விட்டதாகவும், அம்மாவும் அண்ணனும் முத்துகிருஷ்ணன் சந்தேகப்பட்டு விசாரித்ததால் மனமுடைந்த நிலையில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.