மனைவி பிரிந்து சென்ற வேதனையில், இளைஞர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

 

மனைவி பிரிந்து சென்ற வேதனையில், இளைஞர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

நெல்லை

நெல்லை அருகே மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்த இளைஞர் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் சுரண்டை அடுத்துள்ள குலசேகர மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த வாரம் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால், ராஜேஸ்வரி கோபித்துகொண்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மனைவி பிரிந்து சென்ற வேதனையில், இளைஞர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்து காணப்பட்ட சுரேஷ், ராஜேஸ்வரியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி, அவரது உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். நேற்று முன்தினம், ராஜேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற சுரேஷ், அவரது பெற்றோரிடம் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சுரேஷ், வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.