மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கோவில் பூசாரி தற்கொலை!

 

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கோவில் பூசாரி தற்கொலை!

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கோவில் பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் செல்வம் (35). இவர் அதே பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதனிடையே செல்வத்திற்கும், மீனாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 1 ஆண்டிற்கு முன்பு மீனா கோபித்துக் கொண்டு, பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கோவில் பூசாரி தற்கொலை!

மனைவி பிரிந்து சென்றதால் வேதனையடைந்த செல்வம் பல முறை மீனாவை அழைத்தும் அவர் சேர்ந்து வாழ மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த செல்வம் கடந்த 1ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, கடந்த 2 நாட்களாக அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதுள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை போலீசார் பூட்டை உடைத்து சென்று பார்த்தபோது, செல்வம் உடல் அழுகிய நிலையில் தூக்கில் சடலமாக தொங்கினார். இதையடுத்து, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.