மனைவி பிரிந்து சென்றதால், வேதனையில் இளைஞர் தற்கொலை!

 

மனைவி பிரிந்து சென்றதால், வேதனையில் இளைஞர் தற்கொலை!

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் வேதனையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் கீளப்பூடி காலனியை சேர்ந்தவர் வேலு (27). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ரோஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான வேலு, குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மனைவி பிரிந்து சென்றதால், வேதனையில் இளைஞர் தற்கொலை!

இதனால் ரோஜா கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்து காணப்பட்ட வேலு, மீண்டும் சேர்ந்து வாழ வருமாறு ரோஜாவை அழைத்துள்ளார். அதற்கு ரோஜா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த வேலு, சம்பவத்தன்று அங்குள்ள காட்டுப் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த பொதட்டூர்பேட்டை போலீசார், வேலுவின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வேலுவின் தந்தை பெரியப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.