சமோசா திடீர் விலை உயர்வால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

 

சமோசா திடீர் விலை உயர்வால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

திடீரென சமோசா விலை உயர்ந்ததால் அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் அமர்கன்டக் ஏரியாவை சேர்ந்தவர் கஞ்சன் சாஹூ. அதே பகுதியில் சமோசா கடை நடத்தி வருகிறார் சாஹூ.

சமோசா திடீர் விலை உயர்வால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

கடந்த 22ம் தேதி அன்று அமர்கண்டக் பகுதியை சேர்ந்த பஜ்ரு ஜெய்ஸ்வால் தனது நண்பர்களுடன் சென்று சமோசா வாங்கி சாப்பிட்டுள்ளார்.

இத்தனை நாளும் இரண்டு சமோசா 15 ரூபாய் என்று விற்று வந்த சாஹூ, திடீர் என்றூ 20 ரூபாயாக விலை ஏற்றிய விசயம் ஜெய்ஸ்வாலுக்கு தெரியவில்லை. இதனால் சாப்பிட்ட சமோசாவுக்கு பணம் கொடுத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் நீண்டதை அடுத்து சாஹூ, போலீசுக்கு போன் செய்து புகாரளித்துவிட்டார். போலீசார் வந்து இரு தரப்பினரையும் விசாரித்து விட்டு சென்றிருக்கிறார்கள்.

இதனால் மேலும் ஆத்திரத்தில் இருந்த ஜெய்ஸ்வால், மறுநாள் மீண்டும் சமோசா கடைக்கு சென்று கஞ்சன் சாஹூவிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். வாக்கு வாதம் முற்றி சண்டையாக மாறி இருக்கிறது.

இதில் ஆத்திரப்பட்ட ஜெய்ஸ்வால், அங்கிருந்த பெட்ரோலை எடுத்து தன் மேல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய்ஸ்வால் உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

சமோ விலை உயர்ந்ததால் வாக்குவாதம் செய்து அதில் ஆத்திரப்பட்டு ஒருஇளைஞர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.