திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் தக்கலை அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குமரி மாவட்டம் தக்கலை அடுத்த மூலச்சல் காட்டுவிளையை சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு ஜெயசிங் (29) உள்ளிட்ட 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். ஜெய்சிங் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவரை தவிர்த்து வீட்டில் உள்ள அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இதனால், தனக்கு திருமணம் ஆகவில்லை என ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

மேலும், அதிகளவு மது குடித்துவிட்டு, வீட்டில் யாருடனும் பேசாமல் தனியே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது தூங்க சென்ற அவர், மறுநாள் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு ஜெய்சிங் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தக்கலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், திருமணமாகாத ஏக்கத்தில் ஜெய்சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.