செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை!

 

செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை!

நெல்லை

நெல்லை அருகே செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி வ.உ.சி நகரை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகன் நாகலிங்கம் (23). கூலி தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல் எப்போதும் செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால், கடந்த சில நாட்களாக நாகலிங்கம் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை!

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு தூங்க சென்ற அவர், நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை பெற்றோர் எழுந்து பார்த்தபோது நாகலிங்கம் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில், போலீசார் நாகலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை அருணாச்சலம் அளித்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.