திருமணமான 4 நாட்களில் இளைஞர் தூக்கிட்டு தற்காலை… பெரம்பலூர் அருகே சோகம்!

 

திருமணமான 4 நாட்களில் இளைஞர் தூக்கிட்டு தற்காலை… பெரம்பலூர் அருகே சோகம்!

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே திருமணம் செய்த 4 நாட்களில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அடுத்த பாளையம் பகுதியை சேர்ந்தவர் அமரேசன் மகன் தியாகராஜன் (30). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 13ஆம் தேதி, பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தியாகராஜன் கழிவறைக்கு சென்றார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கழிவறையின் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, தியாகராஜன் கழிவறை ஜன்னலின் கயிற்றினால் தூக்கிட்ட நிலையில் உயிருக்கு போராடினார்.

திருமணமான 4 நாட்களில் இளைஞர் தூக்கிட்டு தற்காலை… பெரம்பலூர் அருகே சோகம்!

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தியாகராஜன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனை கேட்டு, தியாகராஜனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இது காண்போரை கண் கலங்க செய்தது.

தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 4 நாட்களில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.