ரயில் முன் பாய்ந்து கூலி தொழிலாளி தற்கொலை!

 

ரயில் முன் பாய்ந்து கூலி தொழிலாளி தற்கொலை!

ராமநாதபுரம்

மண்டபம் அருகே குடும்ப தகராறில் இளைஞர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சரவணன் (28). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான சரவணன், மது போதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்து உள்ளனர்.

ரயில் முன் பாய்ந்து கூலி தொழிலாளி தற்கொலை!

இதனால் மனமுடைந்த அவர், நேற்று மண்டபம் பள்ளிக்கூட தெருவின் அருகேயுள்ள ரயில்வே தண்டாவளம் பகுதிக்கு சென்றார். அப்போது, திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் ராமேஸ்வரம் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.