தஞ்சையில் நள்ளிரவில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை!

 

தஞ்சையில் நள்ளிரவில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை!

தஞ்சை

தஞ்சையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை நகரில் உள்ள ரெட்டிப்பாளையம் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் மணிகண்டன் (21). கூலி தொழிலாளி. மணிகண்டனுக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக முத்துராமன் தரப்பில் அரசு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு மணிகண்டன் மருத்துவக் கல்லூரி பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ரயில்வே தண்டாவளம் அருகே சென்றபோது அங்கு மறைந்திருந்த 5 பேர் கும்பல், திடீரென மணிகண்டனை சூழ்ந்து கொண்டு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

தஞ்சையில் நள்ளிரவில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை!

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அந்த கும்பல் மணிகண்டனின் தலையை துண்டித்து, அருகில் உள்ள கன்னியம்மன் கோயில் முன்பு வீசிவிட்டு தப்பிச்சென்றனர். தகவலின் பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முன்விரோதம் காரணாக முத்துராமன் உள்ளிட்ட 5 பேர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, தலைமறைவாக உள்ள கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.