சோழவரம் அருகே இளைஞர் அடித்துக்கொலை – போலீசார் விசாரணை!

 

சோழவரம் அருகே இளைஞர் அடித்துக்கொலை – போலீசார் விசாரணை!

திருவள்ளூர்

சோழவரம் அருகே மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி பழைய விமான தளம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் உடலில் வெட்டுக்காயங்களுடன் கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சோழவரம் போலீசார் இளைஞரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சோழவரம் அருகே இளைஞர் அடித்துக்கொலை – போலீசார் விசாரணை!

மேலும், இந்த சம்பவம் குறித்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் அலமாதி எடப்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (20) என்பதும், மர்மநபர்கள் சிலர் அவரை கடத்திச் சென்று தாக்கியதும் தெரியவந்தது.

இதனை அடுத்து, தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி சதீஷ் குமார் உயிரிழந்தார். இதனை அடுத்து, கொலை வழக்காக மாற்றம் செய்து, மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.