கோவை விமான நிலையத்தில் சுவர் ஏறி குதித்த நபர் கைது!

 

கோவை விமான நிலையத்தில் சுவர் ஏறி குதித்த நபர் கைது!

கோவை

கோவை விமான நிலையத்திற்குள் சட்டவிரோதமாக சுவர் ஏறி குதித்த மேற்கு வங்க தொழிலாளி கைதுசெய்யப்பட்டார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்துள்ளார். இதனை கண்டு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த நபரை மடக்கிப்பிடித்து, பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை விமான நிலையத்தில் சுவர் ஏறி குதித்த நபர் கைது!

அங்கு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த முகமது சதாம் என்பதும், கோவையில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும், நேற்றிரவு இயற்கை உபாதையை கழிக்க விமான நிலைய பகுதிக்கு சென்ற முகமது சதாம், பின்னர் தண்ணீர் தேடி விமான நிலைய சுவரை ஏறி குதித்ததாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் சுவர் ஏறி குறித்த நபரால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.