பட்டியில் ஆடு திருடிய இளைஞர் கைது

 

பட்டியில் ஆடு திருடிய இளைஞர் கைது

மதுரை நாகமலை புதுக்கோட்டை அடுத்துள்ள இல் மாத்தூர் வளையதெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன்(60).

பட்டியில் ஆடு திருடிய இளைஞர் கைது

இவர் ஆடுகளை வைத்து தொழில் செய்துவருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகளை அடைந்துள்ளார். மறுநாள் காலை சென்று பார்த்தபோது 6 ஆடுகள் மாயமானதாக கூறப்படுகிறது.

பட்டியில் ஆடு திருடிய இளைஞர் கைது

இதுகுறித்து கருப்பண்ணன் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நாகமலை புதுக்கோட்டை போலீசார், ஆடுகளை திருடிச்சென்ற கீழ் மாத்தூர் புல்லூத்து பகுதியை சேர்ந்த பாலமுருகனை கைதுசெய்தனர். மேலும், அவனிடமிருந்து 6 ஆடுகளையும், ஆடுகளை திருட பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

பட்டியில் ஆடு திருடிய இளைஞர் கைது