பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது!

 

பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது!

விருதுநகர்

விருதுநகர் அருகே பிளஸ் 1 மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஓ.நடுவப்பட்டியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி பால் வாங்குவதற்காக சென்றபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் குருசாமி (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது!

இதனை அறிந்து அதிர்ச்சிக்குள்ளான மாணவியின் பெற்றோர், குருசாமி மீது விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ வழக்குப்பதிவு செய்து குருசாமியை கைதுசெய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்