16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது!

 

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது!

திண்டுக்கல்

கொடைக்கானலில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த வடகவுஞ்சி கோம்பைகாடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (25). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது!

இதில் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், அவரது பெற்றோர், இதுகுறித்து கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முருகன் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது.

இதனை அடுத்து, முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.