கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது- 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

 

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது- 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து இரண்ரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது- 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

எட்டணி பகுதியில் சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற ராஜ் என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரிடம் இருந்த பையில் சோதனையிட்டனர். அப்போது, விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, ராஜிடம் இருந்த இரண்டரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைதுசெய்து நிதிமன்ற காவலில் அடைத்தனர்.