தாம்பத்ய உறவுக்கு மறுத்த இரண்டாவது மனைவி… மூன்றரை வயது மகளை அடித்து துன்புறுத்திய இளைஞர் கைது!

 

தாம்பத்ய உறவுக்கு மறுத்த இரண்டாவது மனைவி… மூன்றரை வயது மகளை அடித்து துன்புறுத்திய இளைஞர் கைது!

தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜா (23). இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவியும் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதையடுத்து சிங்கராஜாவுக்கு கம்பம் புதுப்பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இதனால் சிங்கராஜாவின் நட்பு நாளடைவில் காதலாக மாற இருவரும் மறுமணம் செய்து கொண்டு தாத்தப்பன்குளம் பகுதியில் வசித்து வந்தனர்.

தாம்பத்ய உறவுக்கு மறுத்த இரண்டாவது மனைவி… மூன்றரை வயது மகளை அடித்து துன்புறுத்திய இளைஞர் கைது!

இதையடுத்து மறுமணம் செய்து கொண்ட பெண்ணை தாம்பத்ய உறவுக்கு சிங்கராஜா அழைத்துள்ளார். அந்த பெண் மறுத்ததால் அவரை அடித்து துன்புறுத்தியதுடன், அந்த பெண்ணின் மூன்றரை வயது குழந்தையையும் அடித்து துன்புறுத்தி உடலில் காயத்தை ஏற்படுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இரவு முழுவதும் வீட்டினுள் அடைத்து வைத்து விட்டு வெளியில் சென்று விட்டார்.

தாம்பத்ய உறவுக்கு மறுத்த இரண்டாவது மனைவி… மூன்றரை வயது மகளை அடித்து துன்புறுத்திய இளைஞர் கைது!

இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு கம்பம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், சிங்கராஜாவை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.