கிருஷ்ணகிரி அருகே போலி கொரோனா சான்றிதழ் தயாரித்த இளைஞர் கைது!

 

கிருஷ்ணகிரி அருகே போலி கொரோனா சான்றிதழ் தயாரித்த இளைஞர் கைது!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் போலி கொரோனா சான்றிதழ் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள சத்தலப்பள்ளியை சேர்ந்தவர் தினேஷ். இவர் பர்கூரில் இணையதள மையம் வைத்து வெளியூர்களுக்கு பயணம் செய்வோருக்கு டிக்கெட் முன்பதிவு செய்து வந்துள்ளார். இவரிடம் பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வோர் டிக்கெட் முன்பதிவு செய்து வந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே போலி கொரோனா சான்றிதழ் தயாரித்த இளைஞர் கைது!

அப்போது, அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என பரிசோதனை சான்றிதழை போலியாக தயாரித்து வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை பர்கூர் அரசு மருத்துவமனை முதன்மை அலுவலர் கலையரசி பேரில், அவர் வழங்கி வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கலையரசி பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், தினேஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து போலி சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்திய சீல், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.